அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களும் தள்ளுபடி - தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்த திமுக

அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களும் தள்ளுபடி - தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்த திமுக

அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களும் தள்ளுபடி - தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்த திமுக
Published on

அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்து, திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முறை ரத்து செய்ய நடவடிக்க எடுக்கப்படும், மாணவர்களுக்கான கல்விக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும், ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை உள்ளிட்ட பல வாக்குறுதிகளை திமுக அறிவித்தது. அதேபோல் அதிமுகவும் பல வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளன. இரண்டு கட்சிகள் வெளியிட்ட வாக்குறுதிகளிலும் பொதுவான அம்சங்கள் சில இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் இன்று தனது பரப்புரையை தொடங்கினார். காலையில் பரப்புரையை தொடங்கிய அவர் மக்களை வீடு வீடாக நேரில் சென்று பார்த்து வாக்கு சேகரித்து வருகிறார். அதேபோல் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் தனது மகனை ஆதரித்து தேனியில் பரப்புரையை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தனது தேர்தல் அறிக்கையில் சிறு மாற்றத்தை செய்து திமுக வாக்குறுதியை வெளியிட்டுள்ளது. முன்னதாக திமுக தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளின் அனைத்துப் பயிர் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என  திருத்தம் செய்து, திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com