திமுக கூட்டத்தில் ஓவைசி பங்கேற்பா? - திமுக சிறுபான்மை பிரிவு செயலர் விளக்கம்

திமுக கூட்டத்தில் ஓவைசி பங்கேற்பா? - திமுக சிறுபான்மை பிரிவு செயலர் விளக்கம்

திமுக கூட்டத்தில் ஓவைசி பங்கேற்பா? - திமுக சிறுபான்மை பிரிவு செயலர் விளக்கம்
Published on

திமுகவின் சிறுபான்மை பிரிவு நடத்தும் பொதுகூட்டத்தில், ஓவைசி பங்கேற்பதாக வெளியான தகவலை அக்கட்சி மறுத்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் வருகிற 6 ஆம் தேதி திமுக சார்பில் சிறுபான்மை பிரிவு சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாசுதீன் ஓவைசியை திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு செயலாளர் மஸ்தான் சந்தித்தார். அப்போது, அவர் சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு, ஓவைசியை அழைத்ததாக செய்தி வெளியானது.

இந்நிலையில் மஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுக்கூட்டத்தில் எப்போதும்போல் திமுகவின் தோழமைக் கட்சித் தலைவர்கள் மட்டுமே சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளதாகவும், ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com