வரிசையில் நின்று வாக்களித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

வரிசையில் நின்று வாக்களித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
வரிசையில் நின்று வாக்களித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மகனுடன் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பலரும் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின், மற்றும் மகன் உதயநிதி ஆகியோருடன் சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வருகை தந்தார். பின்னர் வரிசையில் நின்று மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com