தமிழ்நாடு
திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதி
திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதி
கடலூர் குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, மக்கள் நீதி மய்யத்தின் வேளச்சேரி தொகுதி வேட்பாளர் சந்தோஷ்பாபு, அண்ணாநகர் தொகுதி வேட்பாளர் பொன்ராஜ், சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், சோழிங்கநல்லூர் தி.மு.க. வேட்பாளர் அரவிந்த் ரமேஷ், காரைக்கால் அதிமுக வேட்பாளர் அசனா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதிஷ்க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.