ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரே வெற்றி பெறுவார் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தலைமையிலான அரசு ஆர்.கே.நகர் தொகுதியில் எந்த வளர்ச்சி திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும், திமுக கூட்டணி வேட்பாளருக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.