‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ - தமிழ்நாடு முழுவதும் திமுக MP-க்கள், அமைச்சர்கள் தீவிர பரப்புரை!

கடந்த 3 நாட்களாக ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ எனும் பெயரில் திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. வேலூர், கள்ளக்குறிச்சி, மதுரை மற்றும் காஞ்சிபுரம் என தமிழ்நாட்டின் பல முக்கிய இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்
உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்ட்விட்டர்

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நெருங்கும் நிலையில் பெரும்பான்மையான கட்சிகள் கூட்டணியையும் தொகுதிப்பங்கீட்டினையும் இறுதி செய்து பிரச்சாரத்தில் இறங்கிவிட்டன.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் குழுக்களையும் கட்சிகள் அறிவித்துள்ளன. அதன்படி திமுகவும் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க, தேர்தல் ஒருங்கிணைப்புக்கென தனித்தனியாக குழுக்களை அமைத்துள்ளது.

எம்.பி.கனிமொழி உரை
எம்.பி.கனிமொழி உரை

திமுக எம்.பி.யும் துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி தலைமையிலான நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, மாவட்ட வாரியாக மக்களைச் சந்தித்து அறிக்கைகளை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் - நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துக்கள்’ எனும் தலைப்பில் பல்வேறு தரப்பினரது கருத்துக்களை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கேட்டு வருகிறது.

அதேபோல் தமிழகம் முழுவதும், ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ எனும் பெயரில் தலைமைக் கழகம் அறிவித்துள்ள நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்கான பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி வெள்ளி, சனி, ஞாயிறு என கடந்த 3 நாட்களாக இவை நடைபெற்றன.

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்
இனி நண்பர்களின் Chat-ஐ தேடவேண்டாம்! வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் தனித்தனி Tab - 3 புதிய அம்சங்கள்!

தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டம்!

நாமக்கல்: கடந்த வெள்ளிக்கிழமையன்று (16.02.24) நாமக்கல் மாவட்ட திமுக சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் பரப்புரைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய தமிழச்சி தங்கப்பாண்டியன், “தமிழகத்தின் உரிமைகளை தட்டி கேட்பதால்தான் இங்கு ஐ.டி, சி.பி.ஐ, இ.டி ரெய்டுகளை ஒன்றிய அரசு நடத்துகிறது, ஒன்றிய அரசின் பெயரில் திட்டங்களை வைத்து கொண்டு, அதற்கான முழு நிதியை தராமல், மாநில அரசின் நிதிகளை ஒன்றிய அரசு சுரண்டுகிறது” என தெரிவித்தார்.

தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழச்சி தங்கபாண்டியன்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் ஆனைக்கல்பாளையத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, “நம்மை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்டவைகளை மத்திய அரசு ஆயுதமாக எடுக்கிறது. ஜனநாயகத்திற்கு பேராபத்து வரும் போது திமுக முதல் குரல் கொடுக்கிறது.

தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ், எம்.பி டி.ஆர் பாலு உள்ளிட்டோர் நேற்று தஞ்சையில் கலந்துகொண்டு மாநில அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்தனர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். போலவே கள்ளக்குறிச்சியிலும் பங்குகொண்டு உரையாற்றினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மயிலாடுதுரை: மயிலாடுதுறையில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன், அமைச்சர் மெய்யநாதன், தலைமை கொறடா செழியன் எம்.பி. ராமலிங்கம், திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் சபாபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் கீதா ஜீவன்
அமைச்சர் கீதா ஜீவன்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில், அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி காணாது பத்தாயிரம் வழங்க வேண்டுமென கூறும் பிஜேபி தலைவர் அண்ணாமலை மத்திய அரசு இதுவரை நிவாரண நிதி எதுவும் வழங்கவில்லை, அது குறித்து ஏன் கேள்வி கேட்கவில்லை?” என கேள்வி எழுப்பினார்.

கள்ளக்குறிச்சி: சனிக்கிழமையான நேற்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற உரிமைகளை மீட்போம் ஸ்டாலினின் குரல் பொதுக்கூட்டத்தில், தமிழக சுகாதார மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்துகொண்டு தலைமை ஏற்று சிறப்பித்தார். அப்போது பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், “2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரையிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக” விமர்சித்தார்.

வேலூர்: வேலூர் அண்ணா கலை அரங்கம் அருகே திமுகவின் "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" பொது கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ க்கள், தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில்,"மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வால் தமிழ் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், மத்திய அரசு தமிழ் வளர்ச்சிக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்குவதாகவும்” குற்றஞ்சாட்டினார்.

மதுரை: மதுரையில் அண்ணாநகர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் எம்.பி. ஆ.ராசா பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “தூத்துக்குடி , சென்னை, திருநெல்வேலியில் மழை வந்தது, எத்தனை பேர் இறந்தார்கள், எவ்வளவு வீடுகள் காணாமல் போனது, எவ்வளவு பயிர் நாசமாக போனது... ஆனால் மத்திய அரசு என்ன செய்தது?” என குற்றஞ்சாட்டினார்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காந்தி ரோடு தேரடி பகுதியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டத்தில், பாசிசம் வீழட்டும் ! இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பின் கீழ் பிரச்சாரம் செய்யப்பட்டது. பிரச்சாரத்திற்கு முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமிழ்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டது.

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்
’தங்கல்’ படம்: அமீர்கானுக்கு மகளாக நடித்த 19வயது நடிகை திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com