இ.கம்யூ கட்சிக்கு எந்தெந்த பதவிகள்.. ஒதுக்கீடு செய்த திமுக

இ.கம்யூ கட்சிக்கு எந்தெந்த பதவிகள்.. ஒதுக்கீடு செய்த திமுக

இ.கம்யூ கட்சிக்கு எந்தெந்த பதவிகள்.. ஒதுக்கீடு செய்த திமுக
Published on

திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது.

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. இதையடுத்து நாளை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. அதேபோல, கூத்தாநல்லூர் நகராட்சித் தலைவர் பதவியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பவானி, புளியங்குடி, அதிராம்பட்டினம், போடிநாயக்கனூர் ஆகிய நகராட்சி துணைத் தலைவர் பதவியும் சிபிஐக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வத்திராயிருப்பு, பூதப்பாண்டி, சிவகிரி, புலியூர் பேரூராட்சித் தலைவர் பதவியும், கூத்தைப்பார், ஊத்துக்குளி, மேல சொக்கநாதபுரம், கீரமங்கலம், சேத்தூர், ஜம்பை பகுதிகளில் பேரூராட்சி துணைத் தலைவர் பதவியும் சிபிஐக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com