உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை பெறும் தேதியை திமுக அறிவித்துள்ளது
உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.14 முதல் 20 வரை விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
முன்னதாக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் மாவட்ட தலைமை அலுவலகங்களில் நவ.15, 16ல் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அக்கட்சி ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.