சூடுபிடிக்கும் தேர்தல்களம்: மாவட்டச் செயலாளர்களுடன் விஜயகாந்த் இன்று ஆலோசனை

சூடுபிடிக்கும் தேர்தல்களம்: மாவட்டச் செயலாளர்களுடன் விஜயகாந்த் இன்று ஆலோசனை
சூடுபிடிக்கும் தேர்தல்களம்:  மாவட்டச் செயலாளர்களுடன் விஜயகாந்த் இன்று ஆலோசனை

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் 6 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலை எதிர்கொள்வதற்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் பேசிய கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், 234 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடத் தயார் என்றார். அதேநேரத்தில் தேமுதிக அதிமுக கூட்டணியில் தொடர்கிறது என்றும் பிரேமலதா கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com