தீபாவளி ரயில் முன்பதிவு 2 நிமிடங்களில் நிறைவு

தீபாவளி ரயில் முன்பதிவு 2 நிமிடங்களில் நிறைவு

தீபாவளி ரயில் முன்பதிவு 2 நிமிடங்களில் நிறைவு
Published on

தீபாவளி பண்டிக்கைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், 2 நிமிடங்களிலேயே இடங்கள் அனைத்தும்
நிரம்பிவிட்டன. 

வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட்‌ முன்பதிவுசெய்யலாம் என்பதால், நவம்பர்‌ 2ஆம் தேதிக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. நவம்பர் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமைஎன்பதால் அன்றைய தினத்திற்கான டிக்கெட் முன்பதிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், 8 மணிக்கு தொடங்கிய முன்பதிவு தொடங்கிய 8.02க்கெல்லாம் முடிந்தது. நெல்லை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், சேரன்எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய ரயில்களில் இருக்கைகள் நிரம்பிவிட்டன. ரயில் நிலைய கவுன்டர்களிலும் ஆன்லைனிலும் முன்பதிவுசெய்பவர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய சமமாக இருந்ததாக ரயில்வே அதிகாரி தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com