
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டித்வா புயல், வடதமிழகம் நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் சென்னையில் இருந்து சரியாக 540 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இத்தகைய சுழலில் சென்னையில் இருக்கும் கடற்கரைகளில் காற்றின் வேகம் இயல்பை விட சற்று அதிகரித்துக் காணப்படுகிறது. மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடற்கரைகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. பட்டினப்பாக்கம் கடற்கரையில் வீசும் அதிகப்படியான காற்றினால், கடற்கரையில் இருக்கும் மணல் துகள்கள் காற்றில் அடித்துச்செல்லப்பட்டு, கடற்கரையை ஒட்டியிருக்கும் லூப் சாலையில் விழுகிறது,. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் 30ஆம் தேதி அதிகாலையில், டித்வா புயல் வடதமிழகம், அதனையொட்டி உள்ள வடக்கு ஆந்திரா பகுதியை அடையக் கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.