கோவை மாவட்டம் வழியாக கேரளாவிற்கு காய்கறிகள், இறைச்சி, முட்டை செல்கின்றன. கேரளாவில் இருந்து திரும்பி வரும் இந்த வாகனங்களை சோதனை செய்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் ஜிஎஸ் சமீரன் நேரில் பார்வையிட்டு கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.