சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம்: பட்டியலினத்தவர் ஆணையத் தலைவர் இன்று ஆய்வு

சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம்: பட்டியலினத்தவர் ஆணையத் தலைவர் இன்று ஆய்வு

சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம்: பட்டியலினத்தவர் ஆணையத் தலைவர் இன்று ஆய்வு
Published on

கோவை நடூரில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியலினத்தவர் ஆணையத் தலைவர் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். 

மேட்டுப்பாளையத்தில் பங்களா வீடு ஒன்றின் சுற்றுச்சுவர் கருங்கற்களால் கட்டப்பட்டிருந்தது. அந்தச் சுற்றுச்சுவரின் உயரம் 20 அடியாகும். 80 அடி நீளம் கொண்ட அந்தக் கருங்கல் சுற்றுச்சுவரின் அகலம் 2 அடியாகும். தொடர் மழையின் காரணமாக 3 ஆள் உயரம் கொண்ட அந்தச் சுவரின் ஒரு பகுதி அருகில் இருந்த மண் வீடுகள் மீது விழுந்தது.

அதிக எடை கொண்ட கருங்கல் சுவர் விழுந்ததால் மண்ணால் கட்டப்பட்ட ஓட்டுவீடுகள் தரைமட்டமாயின. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 

முன்னதாக சுவர் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய சமூகநீதி அமைச்சர் தாவர் சந்த் கெலாட்டை சந்தித்து விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மனு அளித்தார். தீண்டாமைச் சுவர் என புகார் எழுந்த நிலையில், தேசிய பட்டியலினத்தவர் நல ஆணைய தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோர் இன்று சம்பவ இடத்திற்கு செல்கின்றனர். சுவர் எதற்காக எழுப்பப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் குறித்து அவர்கள் ஆய்வு செய்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com