மதுபாட்டிலுடன் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்ட வாகனத்தில் ஏறிய நபர்: குழுவை நீக்கி உத்தரவு

மதுபாட்டிலுடன் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்ட வாகனத்தில் ஏறிய நபர்: குழுவை நீக்கி உத்தரவு
மதுபாட்டிலுடன் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்ட வாகனத்தில் ஏறிய நபர்: குழுவை நீக்கி உத்தரவு

நெறிமுறைகளை மீறி நடந்துகொண்டதால் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் சர்மிளா சங்கர் தலைமையிலான பிரசார குழுவை நீக்கி முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் 'இல்லம் தேடிக் கல்வி' என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தார். தன்னார்வலர்களைக் கொண்டு இந்த திட்டத்தின் மூலம் கல்வியை மாணவர்களுக்கு வழங்க அரசு திட்டம் வகுந்திருந்தது. திருச்சியில் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த 8 கலைக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கி நடைபெற்றது.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் ஈடுபட்டு வந்த 8 பிரசாரக் குழுக்களில் சர்மிளா சங்கர் தலைமையிலான பிரசார குழுவைச் சேர்ந்த சங்கர் என்பவர், பள்ளிக் கல்வித்துறையின் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் என்ற டி ஷர்ட்டுடன் டாஸ்மாக் கடையில் கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு மது வாங்கியதோடு, மதுவை 'இல்லம் தேடிக் கல்வி' பிரசார வாகனத்திலேயே வைத்து கொண்டுசென்றார்.

நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டதால் அந்த பிரசார குழுவை விழிப்புணர்வு பிரச்சாரத்திலிருந்து முழுமையாக நீக்கி திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால முரளி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com