சாலையோரம் நடப்பட்டிருந்த திமுக கொடிக்கம்பத்தால் விபரீதம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருமண நிகழ்ச்சிக்காக, அமைச்சர்களை வரவேற்க வைக்கப்பட்டிருந்த திமுக கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து, விவசாயி ஒருவரின் பற்களை பதம் பார்த்துள்ளது.

செய்தியாளர் - T. நவநீத கணேஷ்

------

அருப்புக்கோட்டை அருகே அகரத்துப்பட்டியில் திமுக நிர்வாகியின் இல்லத் திருமணம் நடந்தது. இதற்காக அந்த பகுதியில் அமைச்சர்களை வரவேற்று திருச்சுழி சாலையில் ஏராளமான திமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டு, பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் செவல்பட்டி கார்த்திகேயன் நகரைச் சேர்ந்த சண்முகவேல் என்ற விவசாயி அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றபோது, திமுக கொடிக்கம்பம் அவரது முகத்திலேயே சாய்ந்து விழுந்துள்ளது.

விருதுநகர்
“நிவாரணமே வேண்டாம்: இந்த தண்ணிய வெளியேத்துனா போதும்” - வேதனையில் குடியிருப்புவாசிகள்!

இதில் விவசாயி சண்முகவேலின் வாய் கிழிந்து 5 பற்கள் உடைந்தன. காயமடைந்த சண்முகவேல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சண்முகவேலின் உறவினர்கள் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com