“நீ பார்த்தாயா..? ஆதாரத்தை காட்டு”-வைரமுத்து புகாருக்கு பாரதிராஜா காட்டம்

“நீ பார்த்தாயா..? ஆதாரத்தை காட்டு”-வைரமுத்து புகாருக்கு பாரதிராஜா காட்டம்
“நீ பார்த்தாயா..? ஆதாரத்தை காட்டு”-வைரமுத்து புகாருக்கு பாரதிராஜா காட்டம்

#MeToo பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “நீ பார்த்தியா.. ஆதாரத்தை காட்டு” என இயக்குநர் பாரதிராஜா காட்டமாக பேசியுள்ளார்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இதற்காக சர்வதேச அளவில் தொடங்கப்பட்டது தான் #MeToo என்ற பிரச்சாரம். அதன் தாக்கம் இந்தியாவிலும் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகைகள் பலர் முக்கிய பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர். பாடகி சின்மயி புகாரை அடுத்து தமிழகத்திலும் இந்த விவகாரம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சின்மயி தெரிவித்த புகார் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், இலங்கையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பாரதிராஜாவிடம், வைரமுத்து மீதான சின்மயின் பாலியல் புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதலில், “மன்னிக்கவும், என் சம்பந்தமாக, என் சினிமா சம்பந்தமாக என் தொழில் சம்பந்தமாக எது கேட்டாலும், பதில் சொல்கிறேன்” என்று பாரதிராஜா பதில் அளித்தார். 

இருப்பினும், செய்தியாளர்கள் மீண்டும் #MeToo புகார்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, “என்ன Meet? What Meet? #MeToo என்றால் என்ன? என்ன பிரச்னை?. Metoo பற்றி கேள்விப்படுவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது; ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்” என்று காட்டமாக பதில் அளித்தார் பாரதிராஜா. அதோடு, நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். என்னிடம் இனி எந்தக் கேள்வியும் கேட்க கூடாது என ஆங்கிலத்தில் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com