கோழிப் பண்ணையில் தீ விபத்து
கோழிப் பண்ணையில் தீ விபத்துpt desk

திண்டுக்கல்: கோழிப் பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து – 3,000 கோழிகள் எரிந்து நாசம்

வத்தலக்குண்டு அருகே கோழிப் பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 ஆயிரம் கோழிகள் தீயில் எரிந்து நாசமாகின.
Published on

செய்தியாளர்: J.அருளானந்தம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், சித்தையன்கோட்டை பகுதியில் கோழிப் பண்ணை அமைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு அவரது கோழிப் பண்ணையின் மேற்கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. சில நிமிடங்களில் தீ மளமளவென கோழிப் பண்ணை முழுவதும் பரவியது.

கோழிப் பண்ணையில் தீ விபத்து
கோழிப் பண்ணையில் தீ விபத்துpt desk

தகவல் அறிந்து விரைந்து வந்த ஆத்தூர் தீயணைப்பு வீரர்கள் பண்ணையில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் கருகி உயிரிழந்தன.

கோழிப் பண்ணையில் தீ விபத்து
சேலம்: நிற்காமல் சென்ற கார்... விரட்டிப் பிடித்த போலீசார் - 500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

மின் கசிவு காரணமாக தீ பிடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வருவாய் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com