கொடூரமாக கொல்லப்பட்ட தாயும் மகனும்; பல கோணங்களில் விசாரிக்கும் காவல்துறை

கொடூரமாக கொல்லப்பட்ட தாயும் மகனும்; பல கோணங்களில் விசாரிக்கும் காவல்துறை
கொடூரமாக கொல்லப்பட்ட தாயும் மகனும்; பல கோணங்களில் விசாரிக்கும் காவல்துறை

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே குருக்களையன்பட்டி தோட்டத்து வீட்டில் வசித்த தாய், மகன் கொடூரமாக வெட்டிக் கொலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா ஏரியோட்டை அடுத்த குருக்களையன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (40), விவசாயியான இவர், அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு தோட்டத்தில் வேலையை முடித்துவிட்டு தோட்டத்து வீட்டில் தனது தாய் சௌந்தரம்மாள் (60) என்பவருடன் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை அவரது தோட்டத்துக்கு பால்காரர் பால் கறக்க வந்துள்ளார். அப்போது அங்குள்ள கட்டிலில் தாய், மகன் இருவரும் கொடூரமாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எரியோடு போலீசார் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சீனிவாசன் வேடசந்தூர் டிஎஸ்பி மகேஷ், இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து சம்பவத்திற்கு தடயவியல் துறை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு எதற்காக கொலை நடந்தது கொலையாளிகள் யார் என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முன்விரோதம் காரணமாக கொலை எதும் நடைபெற்றதா என்ற கோணத்தில் எரியோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படைகள் அமைத்து கொலை குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

தாயும் மகனும் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com