திண்டுக்கல்: லஞ்ச வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற ED அதிகாரி நீதிமன்றத்தில் கையெழுத்து

திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
ED Officer
ED Officerpt desk

செய்தியாளர்: அஜ்மீர் ராஜா

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டார். பின்னர் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ED Officer
ED Officerpt desk

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகியவை அங்கிட் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அங்கிட் திவாரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளிக்கும்படி கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

ED Officer
தூத்துக்குடி: ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.36 கோடி மோசடி – தலைமறைவாக இருந்த நபர் கைது

இதனை அடுத்து கடந்த 22 ஆம் தேதி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதி மோகனா, ‘தமிழ்நாட்டை விட்டு வெளியே எங்கும் செல்லக்கூடாது’ எனக் கூறி அங்கிட் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். மேலும் நாள்தோறும் நீதிமன்றத்தின் வேலை நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்து அங்கிட் திவாரியின் பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ED Officer arrested
ED Officer arrestedpt desk

இந்நிலையில் இன்று (26.03.24) திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு வருகை தந்த அங்கிட் திவாரி நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com