திண்டுக்கல்: வீடு புகுந்து இளைஞர் கொலை – மர்ம நபருக்கு போலீசார் வலை

திண்டுக்கல்: வீடு புகுந்து இளைஞர் கொலை – மர்ம நபருக்கு போலீசார் வலை

திண்டுக்கல்: வீடு புகுந்து இளைஞர் கொலை – மர்ம நபருக்கு போலீசார் வலை
Published on

திண்டுக்கல்லில் வீடு புகுந்து இளைஞர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல் முருகபவனம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர் (18) பெயிண்ட்ராக பணிபுரிந்து வரும் இவர், நேற்றிரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர், பிரபாகர் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார், பிரபாகரன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார், கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு கொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com