‘புதிய தலைமுறை’யின் டிஜிட்டல் அறிவோம் நிகழ்ச்சி: மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

சந்தோஷி கல்வி நிறுவனத்துடன் இணைந்து புதிய தலைமுறை சார்பில் நடத்தப்பட்ட டிஜிட்டல் அறிவோம் நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
டிஜிட்டல் அறிவோம் நிகழ்ச்சி
டிஜிட்டல் அறிவோம் நிகழ்ச்சிபுதிய தலைமுறை

புதிய தலைமுறை மற்றும் ஸ்ரீ சந்தோஷி கல்வி நிறுவனங்கள் இணைந்து, ‘டிஜிட்டல் அறிவோம்’ என்ற மாணவர்களுக்கான நிகழ்ச்சியை கடந்த மார்ச் 31-ஆம் தேதி, மதுராந்தகத்தில் உள்ள ஸ்ரீ சந்தோஷி கல்வி நிறுவனத்தில் நடத்தியது.

டிஜிட்டல் அறிவோம்
டிஜிட்டல் அறிவோம்

இதில் புதிய தலைமுறை டிஜிட்டில் பிரிவின் ஆசிரியர் பரிசல் கிருஷ்ணா மற்றும் புதிய தலைமுறையின் அரசியல் பிரிவு ஆசிரியர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

மாறிவரும் இன்றைய சூழலில் எல்லோமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. இப்படிப்பட்ட டிஜிட்டல் உலகை மாணவர்கள் எந்தளவிற்கு உபயோகமானதாக பயன்படுத்த வேண்டும் என்பதை விருந்தினர்கள் சிறப்பாக எடுத்துரைத்தனர்.

டிஜிட்டல் அறிவோம்
டிஜிட்டல் அறிவோம்

மேலும் டிஜிட்டல் உலகில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள், பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தும் சமூக வலைதளங்கள் மூலம் எப்படியெல்லாம் பணம் சம்பாதிப்பது, சமூக வலைதளங்களில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என பல விஷயங்களை அவர்கள் எடுத்துரைத்தனர்.

அதை வீடியோ வடிவில் இங்கு காண்க...

மாணவர்களும் பல்வேறு சந்தேகங்களை விருத்தினர்களிடம் கேட்டு தெளிவுபெற்றனர். டிப்ளமோ, நர்சிங் என பல துறைகளில் பயன்று வரும் மாணவர்கள், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றபின், “டிஜிட்டல் அறிவோம் நிகழ்ச்சி மூலம் டிஜிட்டல் குறித்து எங்களுக்கு மேலும் தெளிவு கிடைத்துள்ளது” என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com