பூந்தமல்லி: தொழிலதிபர் தனது காதலியிடம் நகை பணத்தை கொடுத்தாரா? போலீஸ் காவலில் விசாரணை

பூந்தமல்லி: தொழிலதிபர் தனது காதலியிடம் நகை பணத்தை கொடுத்தாரா? போலீஸ் காவலில் விசாரணை
பூந்தமல்லி: தொழிலதிபர் தனது காதலியிடம் நகை பணத்தை கொடுத்தாரா? போலீஸ் காவலில் விசாரணை

பூந்தமல்லியில் வீட்டில் இருந்த 550 சவரன் நகையை திருடி தனது காதலிக்கு கொடுத்த வழக்கில் தொழிலதிபர் மற்றும் காதலி ஆகிய இருவரையும் காவல் துறையினர் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லியை சேர்ந்தவர் சேகர் (47), இவர், பூந்தமல்லியில் இனிப்பு கடை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கு பழக்கமான இவரது காதலி சுவாதி (22), தனது வீட்டிலிருந்து 550 பவுன் நகைகள், ரூ.30 லட்சம் பணம், கார், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கொடுத்ததாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் அளித்தனர்.

அதன் பேரில் பூந்தமல்லி போலீசார், சுவாதி மற்றும் சேகர் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தன்னிடம் எந்த நகைகளையும் சேகர் கொடுக்கவில்லை என சுவாதி கூறியுள்ளார் தற்போது கொடுக்கப்பட்ட நகைகள் அதிகம் என்பதால் அந்த நகைகளை மீட்பதற்காக இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி போலீசார் முடிவு செய்தனர்.

இதையடுத்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க மனு அளித்தனர். இதில் சுவாதியை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கவும் சேகரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று மாலை முதல் இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். உண்மையாகவே சேகர் சுவாதியிடம் இவ்வளவு நகைகள் மற்றும் பணத்தை கொடுத்தாரா என்ற கோணத்தில் இருவரிடமும் தனித்தனியாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுவாதியிடம் பெண் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் அது மட்டும் இன்றி இரவு நேரங்களில் பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்தனர். இருவரிடம் தனித்தனியாக விசாரணைக்கு பின்னரே நகைகள் எல்லாம் எங்கு வைத்துள்ளார். சேகரை ஏமாற்றி எவ்வளவு நகை, பணம் வாங்கினார் என்பது முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com