லஞ்சப் புகார்: டெல்லி புறப்பட்டார் தினகரன்

லஞ்சப் புகார்: டெல்லி புறப்பட்டார் தினகரன்

லஞ்சப் புகார்: டெல்லி புறப்பட்டார் தினகரன்
Published on

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் ஆஜராவதற்காக டிடிவி தினகரன் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டாகப் பிரிந்தது.

இதற்கிடையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட, இரண்டு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்துக்குப் போட்டியிட்டன. இதுபற்றிய
விசாரணை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்தது. இந் நிலையில், இரட்டை இலை சின்னத்தைச்தங்களுக்குப் பெற்றுத்தர சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி பேரம் பேசியதாக டெல்லி போலீசார்வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக டெல்லி போலீஸ் நிலையத்தில் நேரடியாக இன்று ஆஜராக வேண்டும் என்று சம்மன்அளித்திருந்தனர்.

அதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் டெல்லி புறப்பட்டார். பிற்பகலில் டெல்லி போலீசில்ஆஜராவர் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com