தருமபுரி: திருமணத்தை மீறிய உறவு - காவல்நிலையம் முன்பு விஷம் குடித்து தற்கொலை

தருமபுரி: திருமணத்தை மீறிய உறவு - காவல்நிலையம் முன்பு விஷம் குடித்து தற்கொலை
தருமபுரி: திருமணத்தை மீறிய உறவு - காவல்நிலையம் முன்பு விஷம் குடித்து தற்கொலை

பென்னாகரம் அருகே திருமணத்தை மீறிய உறவால் விஷம் குடித்து தற்கொலை போலீசார் விசாரணை மேற்கொண்டூள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கிட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சதீஸ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சங்கீதா (19) என்பவருக்கும் திருமணமாகி 11 மாத கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில் சதீஸ் அவரது மனைவி சங்கீதா இருவரும் திருப்பூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர்.

அதேபோல் பென்னாகரம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னப்பையன் (20), என்பவரும் திருப்பூரில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னப்பையனும், சதீஸும் பக்கத்து ஊர்கார்கள் என்பதால், சதீஸ் சின்னப்பையனிடம் நட்புடன் பழகி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

அப்போது, சின்னப்பையனுக்கும் சதீஸ் மனைவி சங்கீதாவிற்கும் தவறான உறவு ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இதனை அறிந்த சதீஸ் தகாத உறவை கைவிடுமாறு மனைவியிடம் கூறியுள்ளார். இதனை கேட்காதால் சொந்த ஊருக்கு சங்கீதாவை அழைத்து வந்துள்ளார்.

இதையடுத்து சொந்த ஊர் வந்த சங்கீதா 11 மாத கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, சின்னப்பையனுடன் கடந்த மாதம் 3 தேதி ஊரைவிட்டு சென்று, இருவரும் தலைமறைவானார்கள். இது குறித்து சதீஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் சின்னபையன் மற்றும் சங்கீதா இருவரையும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி நேற்று காவல் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளனர்.

இதனையடுத்து நேற்று சின்னப்பையனும் சங்கீதாவும் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றனர். அப்போது இருவரும் காவல் நிலையம் நுழைவு வாயிலில் திடீரென மயங்கி விழுந்தனர். இதனை பார்த்த பெண் காவலர்கள் உடனடியாக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது இருவரும் விஷம் குடித்தது தெரியவந்தது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னப்பையனும், சங்கீதாவும் உயிரிழந்தனர். இது குறித்து பென்னாகரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக் காதல் ஜோடி விஷம் அருந்திவிட்டு காவல் நிலையம் முன்பு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com