தருமபுரி : நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை தள்ளிச்சென்ற கல்லூரி மாணவர்கள்!

அரூரில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை கல்லூரி மாணவர்கள் தள்ளிச்சென்றுள்ளனர். பழைய பேருந்தென்பதால், அடிக்கடி அது நின்றுவிடுவதாகவும், புதிய பேருந்துகளை இயக்க வேண்டுமென்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
govt bus
govt buspt desk

தருமபுரி மாவட்டம் அரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து தடம் எண் 16 அரூர் - கடத்தூர் வரையிலும், அரூர் பாப்பிரெட்டிப்பட்டி வரையிலும் இயக்கப்படுகிறது. அப்படி இன்று காலை பாப்பிரெட்டிபட்டியில் இருந்து அரூர் வந்த அரசு பேருந்தில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். அப்போது அரசு பேருந்து அரூர் நான்கு ரோடு பேருந்து நிலையம் வந்தபோது திடீரென நின்று விட்டது.

city bus
city buspt desk

பழைய பேருந்து என்பதால், செல்ப் மோட்டார் பழுதாகி இருந்தது. இதனால் பேருந்து ஸ்டார்ட் ஆகாததால், பயணிகள் அதை தள்ளி ஸ்டார்ட் பண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்தை தள்ளிச் சென்றனர். தொடர்ந்து சிறிது தூரம் தள்ளிச் சென்றதும், பேருந்து ஸ்டார்ட் ஆனது. இதனையடுத்து பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறிச் சென்றனர்.

அரூர் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து நகர்ப்புறங்களுக்குச் செல்லக்கூடிய அரசு பேருந்துகள் பழைய பேருந்துகள் என்பதால், அடிக்கடி இது போன்று பாதி வழியில், பழுதாகி நின்று விடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பேருந்தில் பயணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com