தருமபுரியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பழகன், திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது என பேசினார்.
தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக உயர்க் கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது...
" இன்று கிராமசபை என சொல்லிக்கொண்டு பொய் பிரசாரம் செய்துவரும் ஸ்டாலின் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் திமுக ஆட்சிதான் கொண்டு வந்தது எனக் கூறி வருகிறார். ஆனால் 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில்தான் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஸ்டாலின் முதலமைச்சராக வருவதற்கான தலையெழுத்து, அவருக்கு எழுதவில்லை. தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி தொடர சபதம் ஏற்போம்” என அமைச்சர் அன்பழகன் பேசினார்.