மகாளய அமாவாசை - சதுரகிரி கோயிலுக்குச் செல்லத் தடை

மகாளய அமாவாசை - சதுரகிரி கோயிலுக்குச் செல்லத் தடை
மகாளய அமாவாசை - சதுரகிரி கோயிலுக்குச் செல்லத் தடை
பிரதோசம் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமாவாசை, பெளர்ணமி நாட்களில் மட்டும் சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில், மகாளய அமாவாசையையொட்டி, ஏராளமானோர் கோயிலுக்கு வருவார்கள் என்பதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இன்று முதல் எட்டாம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கோயில்களில் பக்தர்கள் வழிபடுவதற்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com