தேவர் ஜெயந்தி விழா: தமிழக அரசின் சார்பாக மரியாதை செலுத்திய மூத்த அமைச்சர்கள்

தேவர் ஜெயந்தி விழா: தமிழக அரசின் சார்பாக மரியாதை செலுத்திய மூத்த அமைச்சர்கள்
தேவர் ஜெயந்தி விழா: தமிழக அரசின் சார்பாக மரியாதை செலுத்திய மூத்த அமைச்சர்கள்

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தியை முன்னிட்டுதமிழக அரசின் சார்பாக மூத்த அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜையை முன்னிட்டு மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, மூர்த்தி, ராஜகண்ணப்பன், ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசும்போது...

பசும்பொன் தேவர் நினைவிடத்தில்,முன்பு கலைஞர் மரியாதை செலுத்தினார். பின்பு ஸ்டாலின் மரியாதை செய்தார் இன்று உடல்நிலை காரணமாக அவரால் வர இயலவில்லை, அரசின் சார்பில் மூத்த அமைச்சர்கள் மரியாதை செலுத்தினோம்.

'மண்ணுக்குள் மாணிக்கம்' என்று அண்ணா சொன்னதை போல பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் முத்துராமலிங்க தேவர். அவர் சொன்னதை போல இன்று பல மாணிக்கங்கள் அரசியலிலும் வாழ்விலும் ஜொலித்து வருகின்றனர் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com