“அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் இல்லை” - ஓபிஎஸ் பேச்சு

“அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் இல்லை” - ஓபிஎஸ் பேச்சு

“அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் இல்லை” - ஓபிஎஸ் பேச்சு
Published on

அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் இல்லை என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், “வலுவாக ஆட்சி நடைப்பெற்று நல்ல திட்டங்கள் மக்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் என்ன தேவையோ அதை அளித்து வருகிறோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறு சரிவு ஏற்பட்டது. ஆனால் அது வேலூர் தேர்தலில் சரி செய்யப்பட்டது. இடைத்தேர்தல் வெற்றி மூலம் என்றும் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என்று மக்கள் காண்பித்துள்ளனர்.

தொண்டர்கள் தான் இயக்கத்தின் இதயம். அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் இல்லை. தமிழ்நாட்டின் ஜீவாதாரண பிரச்சனையான காவேரி பிரச்சனையில் வெற்றி பெற்றுள்ளோம். ஜல்லிக்கட்டில் வரலாற்று புரட்சி படைத்துள்ளோம். எய்ம்ஸ் மருத்துவமனை, 6 மருத்துவ கல்லூரியையும் மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளோம்.

நல்லாட்சியில் வெற்றி பெற்ற நாம், உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் ஒற்றுமயுடன் இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் நாம் மகத்தான வெற்றியை நாம் பெறுவது தான், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு செய்யும் மரியாதை. இந்த வெற்றியை அவருக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும். தொண்டர்களால் நாங்கள். தொண்டர்களுக்காகவே நாங்கள்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com