தமிழகத்தில் தொடரும் உயிரிழப்புகள்

தமிழகத்தில் தொடரும் உயிரிழப்புகள்

தமிழகத்தில் தொடரும் உயிரிழப்புகள்
Published on

சென்னையை அடுத்த ஆவடி அருகே திருமுல்லைவாயிலைச் சேர்ந்த பில்லா என்பவரின் 15 வ‌து மகன் நடராஜ், கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நடராஜ் உயிரிழந்தார்.

இதேபோல, கோவையை அடுத்த பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த அலி அக்பர் என்ற கட்டடத்தொழிலாளி, ஒருவாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். திடீரென சுயநினைவை இழந்த அவர், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

திருப்பூரில் இப்ராஹீம் என்ற பனியன் தொழிலாளியின் 8 வயது மகன் முகமது சித்திக், கடந்த ஒருவாரமாக காய்ச்சலால் அவதியுற்று வந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்கு டெங்கு உறுதியான நிலையில், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார். ஆயினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தாமரைப் புலம் மேற்கு பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் 15 வயது மகள் பூமிகா கடந்த பத்து நாட்களாக காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் தொடரும் உயிரிழப்புகள் மக்களிடையே அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com