ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
Published on

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 7 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி கோரியது. இந்நிலையில் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் அக்டோபர் 24ஆம் தேதி சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிபிஐ தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற காவலை அக்டோபர் 24ஆம் தேதி வரை நீட்டித்தும் டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com