சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பாஜக நிர்வாகி கைது – தாராபுரத்தில் பரபரப்பு

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பாஜக நிர்வாகி கைது – தாராபுரத்தில் பரபரப்பு
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பாஜக நிர்வாகி கைது – தாராபுரத்தில் பரபரப்பு

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய புகாரில் தாராபுரத்தைச் சேர்ந்த பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி கைது செய்யப்பட்டார். இதனால் பாஜகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாஜகவின் தெற்கு மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருந்து வரும் ரைட்டர் வினித்குமார் என்ற நிர்வாகி தனது பேஸ்புக் பக்கத்தில், ”தினந்தோறும் பெட்ரோல் குண்டு, பற்றி எரியும் தமிழகம்” என்று சித்தரிக்கப்பட்ட காட்டும் படங்களுடன் பதிவு செய்திருந்தார்.

சமூக வலைதளங்களில் பிரச்னைக்குரிய வாசகங்களை பதிவு செய்து தமிழக முதலமைச்சரையும் தமிழக காவல்துறை மீதும் அவதூறு பரப்பியதற்காக ரைட்டர் வினித் குமார் வீட்டிற்குச் சென்ற தனி படை போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்து கோவை சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில், பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி கைது செய்யப்பட்டது தாராபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com