தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மதுரைக் கோட்ட தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - நாகர்கோவில், தாம்பரம் - திருநெல்வேலி (வழி கோவில்பட்டி) மற்றும் தென்காசி வழியாக தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் விரைவு சிறப்பு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 3ஆம் தேதி அன்று இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.00 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும் எனவும், மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - சென்னை எழும்பூர் விரைவு சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 5ஆம் தேதி மாலை 03.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும் எனவும், இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் மாம்பலம் ரயில் நிலையத்திலும், சென்னை எழும்பூர் நாகர்கோவில் சிறப்பு ரயில் அரியலூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் நவம்பர் 7ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை வழியாக மறுநாள் காலை 07.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது.

தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து நவம்பர் 8 ஆம் தேதி மாலை 04.00 மணிக்கு புறப்பட்டு மதுரை, கோவில்பட்டி வழியாக மறுநாள் அதிகாலை 03.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு விழுப்புரம் அரியலூர் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் சாத்தூர் கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நவம்பர் 2 செவ்வாய்க் கிழமை காலை 08.00 மணிக்கு துவங்குகிறது என மதுரைக் கோட்ட தெற்கு ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com