ஜெ. இல்லத்தை நினைவிடமாக்க எதிர்ப்பு: தீபா வழக்கு

ஜெ. இல்லத்தை நினைவிடமாக்க எதிர்ப்பு: தீபா வழக்கு

ஜெ. இல்லத்தை நினைவிடமாக்க எதிர்ப்பு: தீபா வழக்கு
Published on

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு தடை விதிக்கக்கோரி அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவில்லமாக மாற்றப்படுமென முதலமைச்சர் பழனிசாமி, கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி அறிவித்தார். இதை எதிர்த்து அண்ணன் மகள் தீபா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், அத்தை ஜெயலலிதா, தந்தை ஜெயகுமார் ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக அந்த இல்லத்தில் வசித்து வந்ததாகவும், பின்னர் தியாகராய நகருக்கு குடி பெயர்ந்ததாகவும் கூறியுள்ளார். ஜெயலலிதா உயில் எதுவும் எழுதி வைக்காத நிலையில், அவரது சொத்துகளுக்கு தானும், சகோதரர் தீபக்கும் தான் சட்டப்பூர்வ வாரிசு எனவும், தனியார் சொத்தை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்த அறிவிப்பை வெளியிட அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் கூறியுள்ளார். இந்த மனு வரும் 9ம் தேதி நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com