தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு: ஒரேநாளில் 8,183 பேருக்கு தொற்று உறுதி

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு: ஒரேநாளில் 8,183 பேருக்கு தொற்று உறுதி
தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு: ஒரேநாளில் 8,183 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் ஒரேநாளில் 8183 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 180 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில்  இன்று 18 ஆயிரத்து 232 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கின்றனர். இன்று 8 ஆயிரத்து 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றுவரை சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 780 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில்  2வது நாளாக 500 பேருக்கும் குறைவான நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. இன்று சென்னையில் 468 பேர் கொரோனாவால் பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறார்கள். கொரோனாவுக்கு தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 180 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்த எண்ணிக்கை 31,015 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com