புதுக்கோட்டை: மனைவியை கொன்று, மகளை வன்கொடுமை செய்த கொடூர தந்தைக்கு மரண தண்டனை!

புதுக்கோட்டை: மனைவியை கொன்று, மகளை வன்கொடுமை செய்த கொடூர தந்தைக்கு மரண தண்டனை!
புதுக்கோட்டை: மனைவியை கொன்று, மகளை வன்கொடுமை செய்த கொடூர தந்தைக்கு மரண தண்டனை!

புதுக்கோட்டை அருகே மனைவியை கொன்றுவிட்டு மகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட நபருக்கு மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

புதுக்கோட்டை அருகே உள்ள தேனிப்பட்டியை சேர்தவன் முருகேசன்(52). இவருக்கு மூன்று மனைவிகள் மற்றும் 10 பிள்ளைகள் இருந்துள்ளனர். இதில் இரண்டாவது மனைவிக்கு பிறந்த ஒரு ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுடன் அதே ஊரில் வசித்து வந்த முருகேசன் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த 16 வயது மகளுடன் தகாத உறவு வைத்திருந்துள்ளார். இதனையறிந்த அவரது இரண்டாவது மனைவி முருகேசனை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முருகேசன் கடந்த 2019ம் ஆண்டு தென்னந்திரயான்பட்டி கிராமத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தனது இரண்டாவது மனைவியை  கொன்றுவிட்டு தனக்கு ஒன்றும் தெரியாததுபோல் போலீசாரிடம் நாடகமாடி உள்ளார்.

இதுகுறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது தனது மகளுடன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதை தனது இரண்டாவது மனைவி கண்டித்ததால் முருகேசன் தனது இரண்டாவது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்ததும், மேலும் இரண்டாவது மனைவிக்கு பிறந்த தனது மகளுடன் தகாத உடல் உறவு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து குற்றவாளி முருகேசனை கைதுசெய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்திருந்தனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் வழக்கின் விசாரணையை முடித்த நீதிபதி சத்யா இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் தனது இரண்டாவது மனைவியை கொன்றதற்காக குற்றவாளி முருகேசனுக்கு மரண தண்டனையும், இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகளுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததற்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அந்தப் பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா தீர்ப்பு வழங்கினார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி சத்யா உத்தரவிட்டார். இதனையடுத்து குற்றவாளி முருகேசனை பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்துச்சென்று திருச்சி மத்திய சிறையில் அடைக்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com