“ரஜினி ரசிகர்கள் மண்குதிரையை நம்பி ஏமாற வேண்டாம்” - நாஞ்சில் சம்பத்

“ரஜினி ரசிகர்கள் மண்குதிரையை நம்பி ஏமாற வேண்டாம்” - நாஞ்சில் சம்பத்
“ரஜினி ரசிகர்கள் மண்குதிரையை நம்பி ஏமாற வேண்டாம்” - நாஞ்சில் சம்பத்

ரஜினி ரசிகர்கள் மண்குதிரையை நம்பி ஏமாற வேண்டாம். தொண்டர்களுக்கு மதிப்பளிக்காமல் இரவல்நிர்வாகிகளை அவர் அறிவித்துள்ளார் என நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு.

“புதிதாக கட்சி துவங்க உள்ள ரஜினிகாந்த் உலகத்தில் எந்த அரசியல் கட்சியும் செய்யாத முறையில் கட்சியை தொடங்குவதற்கு முன்பாகவே கட்சிக்கு நிர்வாகிகளை அறிவித்துள்ளார். பாஜக சொல்லித்தான் இவர் கட்சி துவங்கப்பட்டுள்ளது. பாஜகவின் அறிவுசார் அமைப்பினுடைய நிர்வாகி இங்கே நிர்வாகியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஆர்எஸ்எஸ் பண்ணையில் வளர்ந்தவர். பச்சை வகுப்புவாத சித்தாந்தங்களால் வார்க்கப்பட்டவர். 

40 ஆண்டு காலமாக ரஜினியை நம்பி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைத்த  தொண்டர்களை அவர் நிர்வாகியாக அறிவிக்கவில்லை. உழைக்கின்ற தொண்டர்களை அவர் நிர்வாகியாக அறிவிக்கவில்லை. இரவல் நிர்வாகிகளை அறிவித்த ரஜினியின் கட்சி உருப்படுமா. ரஜினி ரசிகர்களுக்கு நான் கூறுவது ஒன்றே ஒன்று தான். மண்குதிரையை நம்பி நீங்கள் ஏமாந்து விடாதீர்கள். உங்களையும், உங்கள் குடும்பத்தையும், மக்களையும் பார்க்க முயலுங்கள்.

அதிமுக, பாஜகவின் காலடியில் மண்டியிட்டு கிடக்கிறது. அமித்ஷா சென்னைக்கு வந்த போது அனைத்து அமைச்சர்களுடன் சென்று அவரை அதிமுக கொடியுடன் சென்று அவரை வரவேற்கின்றனர். இது போன்ற கேலிக்கூத்து இந்தியாவில் எங்கும் நடைபெறாது. ஒரு அரசியல் நிகழ்ச்சி கிடையாது அரசு நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி தொடரும் என அறிவிக்கும் அவலம் இங்கே தான் நிகழ்ந்துள்ளது” என அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com