தமிழகத்தில் 15,000-ஐ நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் 15,000-ஐ நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் 15,000-ஐ நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு!
Published on

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 14,842 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இன்று 1,22,671 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒரேநாளில் தமிழகத்தில் 14,799, வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 43 பேர் என 14,482 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஏற்கெனவே 3,842 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 4,086 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக ஒரேநாளில் 80 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,475ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 39 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 41 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் 15 பேர் 50 வயதுக்குட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,00,668 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 9,142 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 9,52,186 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com