“44 வயது மகனை யார் கவனிப்பார்..?”- வேதனையில் முதியவர் எடுத்த சோக முடிவு..!

“44 வயது மகனை யார் கவனிப்பார்..?”- வேதனையில் முதியவர் எடுத்த சோக முடிவு..!
“44 வயது மகனை யார் கவனிப்பார்..?”- வேதனையில் முதியவர் எடுத்த சோக முடிவு..!

சென்னையில் முதியவர் ஒருவர் தனது மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வருபவர் முதியவர் விஸ்வநாதன் (82). இவர் மத்திய அரசின் பணியில் பணிபுரிந்து ஓய்வுப் பெற்றார். இவரது மனைவி 15 ஆண்டுகளுக்கு முன்வே இறந்துவிட்டார். விஸ்வநாதனுக்கு 44 வயதில் மனநலம் பாதித்த மகன் ஒருவர் உள்ளார். மனைவி இல்லாததால், மனநலம் பாதிக்கப்பட்ட மகனை விஸ்வநாதன்தான் கவனித்து வந்தார். இருவரும் விஸ்வநாதனின் ஓய்வு ஊதியத்தில் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் விஸ்வநாதனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அவரால் தனது மகனை சரியாக பார்த்துக் கொள்ள முடியாமல் போயிருக்கிறது. எனவே தனது மரணத்திற்கு பிறகு தனது மகனை யார் பார்ப்பார் என்ற சந்தேகம் விஸ்வநாதனுக்கு எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தனது மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார். அதன்படி தனது மகனுக்கு உணவுடன் தூக்க மாத்திரையை அளவிற்கு அதிகமாக கலந்து கொடுத்துள்ளார். அதேபோல இவரும் தூக்க மாத்திரையை உட்கொண்டுள்ளார்.

இதில் விஸ்வநாதனின் மகன் வெங்கட்ராமன் உயிரிழந்து விட்டார். எனினும் விஸ்வநாதன் மயக்க நிலையிலேயே இறந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது வீட்டிலிருந்து வீசிய வாடையை வைத்து அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டை தட்டியுள்ளனர். யாரும் வந்து கதவை திறக்காததால் அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் வந்து வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது வெங்கட்ராமன் உயிரிழந்த நிலையிலும் அவரது தந்தை விஸ்வநாதன் மயக்க நிலையிலும் இருந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். 

தனக்கு பின் தனது மகனை யார் பார்த்துக் கொள்ள போகிறார்கள் என்ற அச்சத்தில் பெற்ற தந்தையே தனது மகனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com