மின்சாரம் தாக்கி தந்தை - மகன் உயிரிழப்பு : திருச்சியில் சோகம்
திருச்சியில் மின்சாரம் தாக்கி தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி வேதாத்திரி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன்(62). இவரது மகன் செந்தில்(33). இவருக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் அவரது மனைவிக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில் சீனிவாசனும் செந்திலும் இன்று தச்சுத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த திருச்சி கோட்டை போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் தந்தை மகன் இருவரும் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

