சிந்தியா பாண்டியன் காலமானார்

சிந்தியா பாண்டியன் காலமானார்
சிந்தியா பாண்டியன் காலமானார்

தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் மனைவியும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான சிந்தியா பாண்டியன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.

கடந்த சில நாட்களாக உடல்நிலை குன்றியிருந்த அவர், தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்தார். நேற்று அவர் உடல்நிலை மோசமானது. இந்நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

சிந்தியா பாண்டியன், 2009-ல் அதிமுக சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட்டவர். அவருக்கு மனோஜ் பாண்டியன், அரவிந்த் பாண்டியன் என்ற இரண்டு மகன்கள். மனோஜ் பாண்டியன் அதிமுக சார்பில் சேரன்மகாதேவி தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். மாநிலங்களவை எம்.பியாகவும் இருந்தவர். மற்றொரு மகன் அரவிந்த் பண்டியன் கூடுதல் அட்டர்னி ஜெனரலாக இருந்தவர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com