சென்னையில் இன்னும் எத்தனை மணிநேரத்துக்கு மழை நீடிக்கும்..?

சென்னையில் இன்னும் எத்தனை மணிநேரத்துக்கு மழை நீடிக்கும்..? - விளக்குகிறார் செய்தியாளர் வேதவள்ளி.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சென்னையின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீரானது வீடுகளில் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்துடன், இன்று இரவு வரை மழையும், காற்றும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்டும், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் புயலின் கண் பகுதி மையம் கொண்டுள்ளது. தென் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்டோடு கன மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்னும் எத்தனை மணிநேரத்துக்கு மழை நீடிக்கும்..? என்பதை இந்த காணொளியில் விளக்குகிறார் செய்தியாளர் வேதவள்ளி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com