இணையவழி குற்றங்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டில் 385 ஆக இருந்த குற்றங்கள், 2020ம் ஆண்டு இரண்டு மடங்கு உயர்ந்து 782 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காலமான 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில் 11,097 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.