இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்: சி.வி.சண்முகம்
இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணியாகிய தங்கள் தரப்புக்கே கிடைக்கும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பான எழுத்துப்பூர்வமான வாதத்தை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார். பின்னர் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், தினகரன் தரப்பினர் அளித்த போலியான ஆதராங்களை எதிர்த்து, தங்கள் தரப்பிற்கே கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதற்கான ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார். எனவே இரட்டை இலை சின்னம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அணியாகிய, தங்கள் தரப்பிற்கு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் தற்போது நடைபெறும் வருமானவரித்துறை சோதனைக்கும் மாநில அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சி.வி.சண்முகம் சுட்டிக்காட்டினார்.

