ஓவியங்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் மதுரை ஓவியர்களுக்கு குவியும் பாராட்டு

ஓவியங்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் மதுரை ஓவியர்களுக்கு குவியும் பாராட்டு
ஓவியங்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் மதுரை ஓவியர்களுக்கு குவியும் பாராட்டு

மதுரையில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை பொது இடங்களில் வரைந்து மதுரை மாவட்ட ஓவியர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

கொரோனோ பொதுமுடக்கம் காரணமாக வேலை இழந்துள்ள நிலையிலும், கொரோனோ தடுப்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளும் ஓவியர்கள், தங்களின் சொந்த முயற்சியால் பொது இடங்களில் கொரோனோ குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் மற்றும் வாசகங்களை வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஓவியர்கள், தங்களின் சொந்த பணத்தைக் கொண்டு ஓவியம் வரையத் தேவையான பொருட்களை வாங்கி பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனோ குறித்து விழிப்புணர்வு ஓவியங்களையும் வாசகங்களையும் வரைந்து மக்களின் மத்தியில் பாராட்டை பெற்று வருகின்றனர். முகக்கவசம் அணிவதன் அவசியம், தனிமனித இடைவெளியின் முக்கியத்துவம், தடுப்பூசி செலுத்தி கொள்வதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஓவியங்களையும் வாசகங்களையும் வரைந்து வருவது பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com