அறுந்து விழுந்த மின்கம்பியால் விவசாயி பலி

அறுந்து விழுந்த மின்கம்பியால் விவசாயி பலி
அறுந்து விழுந்த மின்கம்பியால் விவசாயி பலி

விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பெருவரப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகுரு. விவசாயியான இவர், வயல் பகுதிக்கு நடந்து செல்லும் போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து பாலகுரு இறந்து கிடந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர், இதுதொடர்பாக போலீஸாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பாலகுருவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பேசிய அப்பகுதியினர், பெருவரப்பூரில் அடிக்கடி மின்கம்பிகள் அறுந்துவிழுந்து விபத்து ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மறியல் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com