வேகம் ஒரு நாள் என்னை கொல்லும் என்று இரு சக்கர வாகனத்தில் எழுதி வைத்து இருந்த வாலிபரின் இருச்சக்கர வாகனம் வேகமாக சென்று கட்டுப்பாட்டையிழந்து பனை மரத்தில் மோதி வாலிபர் உயிரிழந்தார்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புதுக்குப்பம் மீனவ கிரமத்தை சேர்ந்தவர் ஆகாஷ். இவர் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். இவர் தனது இருச்சக்க வாகனத்தில் பின் புரத்தில் ‘One day speed will kill's me dont cry because smilling’ என்று எழுதி வைத்து எப்போதும் இரண்டு சக்கர வாகனத்தில் வேகமாக சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று வழக்கம் போல் அவர் வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது இவரது வாகனம் காட்டுப்பாட்டை இழந்து சிதம்பரம் அருகே சின்னாடிக்குழி என்ற இடத்தில் சாலையோரம் இருந்த பனை மரத்தில் அதிவேகத்தில் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து இருந்த அவரது நண்பர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேகம் தன்னை கொல்லும் என்று தெரிந்தும் வாழ வேண்டிய வயதில் விபத்தில் உயிரிழந்து இருப்பது அக்குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை தொடந்து சாலை விதிகளை மதிக்கவேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது ஆனால் கெத்து என்ற மோகத்தில் இதைப்போல் உயிரிழப்பு பலர் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இந்த விபத்தின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.