கடலூர்: மின்கசிவு காரணமாக 4 வீடுகள் எரிந்து நாசம் -ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

கடலூர்: மின்கசிவு காரணமாக 4 வீடுகள் எரிந்து நாசம் -ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
கடலூர்: மின்கசிவு காரணமாக 4 வீடுகள் எரிந்து நாசம் -ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

கடலூர் மாவட்டம் பெருமுளை கிராமத்தில் மின்கசிவு காரணமாக 4 வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளது.

கடலூர் மாவட்டம் பெருமுளை கிராமத்தில் இருக்கும் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் திடீரென ஏற்பட்ட மின்கசிவால் கூரை வீடுகளில் தீப்பிடித்து எரிந்தது. தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைப்பதற்குள் காற்றின் வேகத்தால் அருகருகே இருந்த 4 வீடுகளில் தொடர்ந்து தீ பரவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 4 வீடுகள் தாண்டி தீ பரவாமல் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் வீட்டுக்குள் இருந்தப் பொருட்களை வெளியே கொண்டுவர முடியாமல் போனதால், ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 4 வீடுகளும் முற்றிலுமாக சேதமடைந்தன. இதனால் ரூ.5 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் மொத்தமாய் எரிந்து சாம்பலானது.

இந்நிலையில் நான்கு கூலித் தொழிலாளர் குடும்பங்களும் வீட்டை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் அதிர்ஷ்டவசத்தால் தீ விபத்தில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com