வறுமையின் கொடுமை: ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளை மருத்துவமனையில் ஒப்படைத்த அவலம்

வறுமையின் கொடுமை: ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளை மருத்துவமனையில் ஒப்படைத்த அவலம்
வறுமையின் கொடுமை: ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளை மருத்துவமனையில் ஒப்படைத்த அவலம்

குடும்ப சூழ்நிலை காரணமாக ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகளை அரசு மருத்துவமனையிலேயே ஒப்படைத்துச் சென்ற அவலம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் பிரசவத்திற்கு கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு அக்டோபர் 20ஆம் தேதி ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளை பராமரிக்க முடியாத சூழல் இருப்பதாக குழந்தையின் குடும்பத்தினர் மருத்துவமனை முதல்வர் வள்ளியிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர், போதிய அறிவுரை வழங்கினார். ஆனால், அவர்கள் வளர்க்க முடியாத நிலையை மீண்டும் தெரிவித்து குழந்தைகளை ஒப்படைப்பதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து, எடை குறைவாக இருந்த குழந்தைகளை மருத்துவமனை நிர்வாகத்தினர் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பராமரித்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து குழந்தைகள் உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்ததை அடுத்து 3 பெண் குழந்தைகளும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் குழந்தைகளை பார்வையிட்டு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரிடம் வழங்கி சிறந்த முறையில் குழந்தைகளை பராமரிக்கவும் அறிவுறுத்தினார்.

வறுமை காரணமாக மூன்று பெண் குழந்தைகளை வளர்க்க இயலாத சூழல் ஏற்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதால் 60 நாட்களில் பெற்றோர் மனம் மாறி வந்தால் குழந்தையை அவர்களிடம் ஒப்படைக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com