சாலையின் குறுக்கே பாய்ந்த மாடு: பைக் ஓட்டிவந்த வாலிபருக்கு நேர்ந்த சோக முடிவு

சாலையின் குறுக்கே பாய்ந்த மாடு: பைக் ஓட்டிவந்த வாலிபருக்கு நேர்ந்த சோக முடிவு

சாலையின் குறுக்கே பாய்ந்த மாடு: பைக் ஓட்டிவந்த வாலிபருக்கு நேர்ந்த சோக முடிவு
Published on

கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் அருகே பைக்குக்கு குறுக்கே மாடு பாய்ந்ததில் பொறியியல் பட்டதாரி வாலிபர் உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மாத்தார், செம்பிறாவிளை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். என்பவரின் மகன் அபிசோன் (23) பொறியியல் படித்துள்ள இவர் அழகியமண்டபத்தில் ஹெல்மெட் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவர் நேற்று மாலை திருவட்டாரிலிருந்து அழகியமண்டபம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக மாடு ஒன்று சாலையின் குறுக்கே பாய்ந்துள்ளது. இதில் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் அப்பகுதியிலுள்ள புளியமரத்தில் மோதியது. மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட அபிசோன் படுகாயமடைந்தார்.

உடனடியாக அப்பகுதியினர் அவரை மீட்டு ஆற்றூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிட்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது மாடு மீது பைக் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி கேமரா காட்சிகள் சமூகவலை தளங்களில் பரவி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com